×

மயிலாடுதுறையை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும்

சீர்காழி, அக்.1: மயிலாடுதுறையை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என பிராமணர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.சீர்காழியில் தமிழ்நாடு பிராமணர் சங்க முப்பெரும் விழா நடைபெற்றது.நாகை மாவட்டத் தலைவர் வெங்கட்ராமன் தலைமை வகித்தார். மாவட்ட ஆலோசகர்கள் கோதண்டராமன், வெங்கட்ரமணி, மாவட்டத் துணைத் தலைவர் அருள்.வைத்யநாதன், மாவட்டப் பொருளாளர் கலியகுருமூர்த்தி, ஆலோசகர்கள் ராதாகிருஷ்ணன், பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாநில பொதுச் செயலாளர் சங்கரன், மாவட்ட அமைப்பு செயலாளர் முத்துக்குமார், பாலசுப்பிரமணியன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சியில், மாநிலத் தலைவர் நாராயணன் கலந்துகொண்டு 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுத் தொகையும், டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுபெற்ற ஆசிரியைகள் சரோஜா, மீனாட்சிராஜா ஆகியோருக்கு நினைவுப் பரிசும் வழங்கினார்.

விழாவில் மயிலாடுதுறையைத் தனிமாவட்டமாக தமிழக அரசு உடனே அறிவிக்க வேண்டும். கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும். நூலகத் தந்தை அரங்கநாதன் நினைவைப் போற்றும் வகையில், சீர்காழியில் பொதுநூலகத்துக்கு சொந்த கட்டடம் கட்ட வேண்டும். பிராமணர் சமூகத்திற்கென தனி நல வாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இதில், நிர்வாகிகள் சசிகோபாலன், தியாகராஜன், குருராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். எழுத்தாளர் சீத்தாராமன் நன்றி கூறினார்.

Tags : Mayiladuthurai ,district ,
× RELATED கோடை காலத்தில் தகுந்த நேரத்தில்...