×

வாலாஜா அரசு மருத்துவமனையில் துணிகரம் மயக்க மருந்து கொடுத்து பெண்ணிடம் 4 சவரன் திருட்டு மர்ம பெண்ணிற்கு வலை

வாலாஜா, அக்.1: வாலாஜா அரசு மருத்துவமனையில் மயக்க மருந்து கொடுத்து பெண்ணிடம் 4 சவரன் நகையை திருடிச்சென்ற மர்ம பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
காவேரிப்பாக்கத்தை சேர்ந்தவர் ராணி(55). இவர் சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு நேற்று வந்தார். அப்போது அங்கிருந்த அடையாளம் தெரியாத பெண் ஒருவர் ராணியிடம் நைசாக பேச்சுக்கொடுத்தார். சிகிச்சை பெறும்போது நகைகளை போட்டுக்கொள்ளாதே எனவும், அதை கழற்றி பையில் வைத்துக்கொள்ளும்படி கூறினார்.
இதனை நம்பிய ராணி நகைகளை கழற்றி தான் கொண்டுவந்த துணிப்பையில் வைத்துக்கொண்டார். உடனடியாக அந்த மர்மப்பெண் நீ களைப்பாய் இருக்கிறாய் எனக்கூறி தான் வைத்திருந்த ஜூஷை கலக்கி ராணியிடம் கொடுத்தார்.

இதை வாங்கி குடித்த சிறிது நேரத்தில் மயக்கநிலையில் இருந்தபோது அந்த மர்மப்பெண் பையிலிருந்த 4 சவரன் நகையை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் மாயமானார். பின்னர், சுயநினைவு வந்தவுடன் பையில் இருந்த நகைமாயமானது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து வாலாஜா போலிசில் ராணி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து மாயமான மர்மப்பெண்ணை தேடிவருகின்றனர்.

Tags : Valaja Govt ,
× RELATED 8 கைதிகள் தபால் வாக்கு செலுத்தினர் வேலூர் மத்திய சிறையில்