×

கடை ஊழியரை மிரட்டிய வாலிபர் கைது

புதுக்கோட்டை, அக். 1: புதுக்கோட்டை அருகே உள்ள திம்மராஜபுரம் வடக்குத்தெருவை சேர்ந்த பாஸ்கர் மகன் பிரீதம் (21). பாஸ்ட்புட் கடையில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு முடிவைத்தானேந்தல் கீழத் தெருவை சேர்ந்த ரங்கசாமி மகன் ராமசாமி (25), பாஸ்ட்புட் கடைக்கு வந்துள்ளார். அங்கு சாப்பிட்டு முடித்துவிட்டு ராமசாமி பணத்தை கொடுக்க மறுத்து பைக்கில் புறப்பட்டுச் சென்றார்.பிரீதம் அவரை பின்தொடர்ந்து சென்று மங்களகிரி விலக்கு அருகே வழிமறித்து சாப்பிட்டதற்கு பணம் கேட்டுள்ளார். அப்போது ராமசாமி, தன்னிடம் இருந்த கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து பிரீதம் கொடுத்த புகாரின் பேரில் புதுக்கோட்டை எஸ்ஐ முத்துராஜா வழக்கு பதிந்து ராமசாமியை கைது செய்தார்.

Tags : shop employee ,
× RELATED ரேஷன்கடை ஊழியர் மீது வழக்கு