×

தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல மிஷனெரிகள் நினைவு பவனி

நாசரேத், அக். 1: தூத்துக்குடி- நாசரேத் திருமண்டலத்தில் உள்ள மிஷனெரிகளை நினைவு கூறும் பவனி நடந்தது. தென்னிந்திய திருச்சபை தூத்துக்குடி -நாசரேத் திருமண்டல 16வது ஸ்தோத்திரப் பண்டிகையை முன்னிட்டு மிஷனெரிகளை நினைவு கூறும் பவனி நேற்று நடந்தது. தூத்துக்குடி பன்னீர்குளத்தில் இருந்து பவனி புறப்பட்டு ஜெய்லானி தெரு, டூவிபுரம் தூய யாக்கோபு ஆலயம், சாயர்புரம், பண்ணைவிளை, மூக்குப்பீறி, நாசரேத், சாத்தான்குளம், நல்லம்மாள்புரம், பெத்லகேம், போலையர்புரம், முதலூர், கடாட்சபுரம், மெஞ்ஞானபுரம், வெள்ளாளன்விளை, கிறிஸ்டியாநகரத்தில் முடிவடைந்தது.தூத்துக்குடி-   நாசரேத் திருமண்டல பேராயர் தேவசகாயம் பவனியை ஜெபித்து தொடங்கி வைத்தார். நாசரேத் தூய யோவான் பேராலய வளாகத்தில் உள்ள நாசரேத்தின் தந்தை எனப்படும் கனோன் மர்காஷிஸ் ஐயர், தாமஸ் பிரதர்ட்டன், அனிபிரதர்ட்டன், அனிகேமர் ஆகிய 4 மிஷனெரி கல்லறைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டன. நாசரேத்தின் தந்தை எனப்படும் கனோன் மர்காஷிஸ் ஐயர் கல்லறைக்கு திருமண்டல பேராயர் தேவசகாயம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். திருமண்டலத்தில் உள்ள மொத்தம் 35 மிஷனெரி கல்லறைகளுக்கு மாலைஅணிவிக்கப்பட்டன.

இதில் திருமண்டல பேராயரின் துணைவியார் சாந்தினிதேவசகாயம், திருமண்டல உபதலைவர் தேவராஜ் ஞானசிங், குருத்துவ காரியதரிசி மோசஸ்ஜெபராஜ், திருமண்டல ஆரம்ப, நடுநிலைப்பள்ளிகளின் மேலாளர் ஜேஸ்பர்அற்புதராஜ், தூய யோவான் பேராலய தலைமை குரு எட்வின் ஜெபராஜ், உதவிகுரு இஸ்ரவேல் ஞானராஜ், திருமண்டல சமூக நலத்துறை இயக்குநர் மைக்கேல்ராஜ், பாலியர் நண்பன் இயக்குநர் கிளாட்சன், வாலிபர் ஐக்கிய சங்க இயக்குநர் ஜான்சன், ஜிஎம்எஸ் செயலாளர் டேனியல்,
குருமார்கள் கோல்டுவின், தாமஸ், லூர்துராஜ்,  ஆல்வின், ரவி, நாசரேத் சேகர பொருளாளர் மர்காஷிஸ்,  ஜெயராஜ் அன்னபாக்கியம் பொறியியல் கல்லூரி முன்னாள் தாளாளர் லேவி அசோக் சுந்தரராஜ், திருமண்டல பெருமன்ற உறுப்பினர்கள் மாமல்லன், ஆண்ட்ரூஸ், பில்லிகிராம்,  மர்காஷிஸ் மெட்ரிக் பள்ளி தாளாளர் லயன் புஷ்பராஜ் மற்றும் திருமண்டல குருமார்கள், பெருமன்ற உறுப்பினர்கள் மற்றும் சபை மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags : Thoothukudi ,Nazareth ,Thirumandala Missionaries ,
× RELATED தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி...