×

திருமணம் செய்து வைக்காததால் விஷம் குடித்த மாணவர் சிகிச்சை பலனின்றி சாவு

திருக்காட்டுப்பள்ளி, அக்.1: திருக்காட்டுப்பள்ளி பாலாஜிநகரை சேர்ந்த ரமேஷ் மகன் சரவணன் (19). இவர் திருச்சி துவாக்குடியில் உள்ள கல்லூரியில் மூன்றாமாண்டு பிஎஸ்சி விஷூவல் கம்யூனிகேஷன் படித்து வந்தார். இந்நிலையில் அவர் தன் தாயிடம் நேமத்தை சேர்ந்த ஒரு பெண்ணை காதலிப்பதாகவும், அவரை திருமணம் செய்து வைக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு அவரது தாய், உனக்கு திருமண வயது இன்னும் வரவில்லை, இப்போது படிப்பில் மட்டும் கவனம் செலுத்து என்று கூறியுள்ளார்.இதனால் மனமுடைந்து கடந்த 17ம் தேதி எலிபேஸ்ட் விஷத்தை சரவணன் சாப்பிட்டுள்ளார். இதையடுத்து அவரை மீட்டு மேல்சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் திருக்காட்டுப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Student ,
× RELATED கோவை கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய...