×

மார்த்தாண்டம் அருகே மாடியில் இருந்து விழுந்து வாலிபர் பலி

மார்த்தாண்டம், அக்.1: மார்த்தாண்டம் அருகே மருதங்கோடு பகுதியை சேர்ந்தவர் கிப்ஸன் டானியேல்(36). இவரது மனைவி கலிஜா. தம்பதிக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் கிப்ஸன் டானியேல் வீட்டு மாடியில் மழைநீர் தேங்கி நின்றுள்ளது. அதை வெளியேற்ற ேநற்று முன்தினம் அவர் வீட்டு மொட்டை மாடிக்கு சென்றுள்ளார். மழைநீர் தேங்கி நின்றதால் அங்கு பாசி படர்ந்திருந்தது. அதை கவனிக்காமல் கால் வைத்த கிப்ஸன் டானியேல் வழுக்கி சன்-சைடில் விழுந்து, அங்கிருந்து தரையில் விழுந்தார். இதில் அவர் படுகாயம் அடைந்தார். உறவினர்கள் உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே கிப்ஸன் டானியேல் பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் குறித்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : floor ,Marthandaam ,
× RELATED பால்கனியில் சாப்பாடு...