×

கன்னியாகுமரியில் அரசு பஸ் மோதியதில் சுற்றுலா வந்த ரயில்வே ஊழியர் பலி

கன்னியாகுமரி, அக். 1:  பீகார் மாநிலம் நாலந்தா மாவட்டத்தை சேர்ந்தவர் சஞ்சுகுமார் (39). இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இவர் ஆந்திரமாநிலம் ராஜமுந்திரி கிழக்கு கோதாவரி பகுதியில் ரயில்வே ஊழியராக பணிபுரிந்து வந்தார். கன்னியாகுமரிக்கு குடும்பத்துடன் சுற்றுலா வந்த அவர் லாட்ஜில் அறை எடுத்து தங்கியிருந்தார். நேற்று கன்னியாகுமரி ரவுண்டானா சந்திப்பில் கோவளம் செல்லும் சாலையில் குடும்பத்துடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அரசு விரைவு பஸ் அவர் மீது மோதியது. படுகாயமடைந்த அவரை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து உறவினர்கள் கன்னியாகுமரி காவல்நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் விசாரணை நடத்தி அரசு பஸ் டிரைவர் குறும்பனையை சேர்ந்த ஜாண்சன் (44) மீது வழக்குப்பதிவு செய்தனர்.

Tags : Railway employee ,Kanyakumari ,
× RELATED கன்னியாகுமரி – காரோடு நான்கு...