×

பெரியபாளையத்தில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு பேரணி

ஊத்துக்கோட்டை, செப். 30: பெரியபாளையத்தில்   ஊட்டச்சத்து மாத விழா விழிப்புணர்வு பேரணி நடந்தது.திருவள்ளூர் மாவட்டத்தில் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் தேசிய ஊட்டச்சத்து மாதமாக ‘வீட்டுக்கு வீடு பழகு ஊட்டச்சத்து உணவு’ என்ற தலைப்பில் போஷன் அபியான் திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் மூலம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.  இந்நிலையில், பெரியபாளையம்  பகுதியை சுற்றியுள்ள  20  மையங்களை சேர்ந்த  அங்கன்வாடி பணியாளர்கள் ஊட்டச்சத்து மாத விழா கொண்டாடினர்.
இவ்விழாவிற்கு, மேற்பார்வையாளர் கிருஷ்ணவேணி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ராசாத்தி மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் பெரியபாளையம்  காவல் நிலையம்  எதிரில் கோலம் போட்டும், கும்மியடித்தும், உறுதி மொழி எடுத்து, பாடல்கள் பாடி விழிப்புணர்வை ஏற்படுத்தி பேரணியாக சென்றனர்.பின்னர்,  சத்துமாவில் கொழுக்கட்டை, கஞ்சி, பாசிபயிரில் பாயசம், சுண்டல் ஆகியவைகளை செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இறுதியில், சுதா  நன்றி கூறினார்.

Tags :
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்...