×

குடும்பத் தகராறில் அறிவுரையை கேட்காத அண்ணனை கத்திரியால் குத்திய தம்பி உள்பட 2 பேர் கைது

திருச்சி, செப்.30: திருச்சி சங்கிலியாண்டபுரம் எம்ஜிஆர் நகர் குடிசைப்பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்(44), பழைய இரும்பு வியாபாரி. இவரது மனைவி கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தாய் வீடான துவாக்குடியில் வசித்து வருகிறார். மனைவியுடன் சேர்ந்து குடும்பம் நடத்துமாறு குடும்பத்தினர் கூறியும் ரமேஷ் ஏற்க மறுத்து தனியே வசித்து வருகிறார்.இதில் நேற்று முன்தினம் ரமேஷின் தம்பி தங்கவேல்(42), இவரது மைத்துனர் கருப்புசாமி(22) ஆகிய இருவரும் ரமேஷிடம் சென்று மனைவியுடன் சேர்ந்து வாழுமாறு கூறியுள்ளனர். அப்போது இருவருக்கிடையே தகராறு ஏற்பட்டதையடுத்து ஆத்திரமடைந்த தங்கவேல், அருகில் இருந்த கத்திரிக்கோலை எடுத்து அண்ணனை சரமாரியாக குத்தினார். இதில் முதுகு உள்ளிட்ட பகுதியில் காயமடைந்த ரமேஷ் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் பாலக்கரை எஸ்ஐ சட்டநாதன் வழக்குப்பதிந்து, தங்கவேல், கருப்புசாமியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தார்.

Tags : brothers ,stabbing brother ,
× RELATED பிரபல நகைக்கடையில் 28.50 கிலோ தங்க காசு...