×

கிராம மக்களிடம் முசிறி எம்எல்ஏ குறைகேட்பு தொட்டியம் பகுதியில் 5,000 மனு குவிந்தது

தொட்டியம், செப்.30: தொட்டியம் பகுதியில் உள்ள கிராமங்களில் பொதுமக்களை முசிறி எம்எல்ஏ நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.தொட்டியம் தாலுகா முள்ளிப்பாடி, மணமேடு அழகரை, கொளக்குடி அரங்கூர், காமலாபுரம், தோளூர்பட்டி, அரசலூர், புத்தாநத்தம், சீனிவாசநல்லூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு எம்எல்ஏ செல்வராஜ் நேரில் சென்றார். அங்கிருந்த மக்கள் முதியோர், ஆதரவற்ற மற்றும் விதவை உதவித்தொகை, பசுமை வீடு, பசுமை வீடு, ஏரி, வரத்து வாய்க்கால் தூர்வாருதல், ஆக்கிரமிப்பு அகற்றுதல், பள்ளிகளுக்கு கூடுதல் கட்டிடம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை அளித்தனர். குறை கேட்பு கூட்டங்களில் 5,000 மனுக்கள் மக்களிடமிருந்து பெறப்பட்டது. இந்த மனுக்களை துறை சார்ந்த அலுவலர்களுக்கு எம்எல்ஏ செல்வராஜ் அனுப்பி வைத்தார். நிகழ்ச்சியில் ஒன்றிய ஆணையர்கள் செந்தில்குமார், ரவிச்சந்திரன், பொறியாளர் மாதவன், வருவாய்த்துறை அலுவலர்கள், கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் உடனிருந்தனர்.

Tags : Muziri MLA ,area ,Thottiyam ,
× RELATED கர்நாடகாவில் வாகன சோதனையின்போது 1,200...