×

ஒரத்தநாடு அருகே திருமணமான 5 ஆண்டில் பெண் மர்ம சாவு: ஆர்டிஓ விசாரணை

ஒரத்தநாடு, செப். 29: ஒரத்தநாடு அருகே திருமணமான 5 ஆண்டுகளில் பெண் மர்மமான முறையில் இறந்தது குறித்து இன்று ஆர்டிஓ விசாரணை நடக்கிறது.தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள பெரிய பொன்னாப்பூர் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் டிரைவர் ஜெயராமன். இவரது மனைவி வனிதா (39). இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை வனிதா அவரது வீட்டில் இறந்த நிலையில் கிடந்தார். இச்சம்பவம் குறித்து ஜெயராமன் வனிதாவின் பெற்றோருக்கு தகவல் தொpவித்தார். இதுகுறித்து வனிதாவின் தாயார் ஒரத்தநாடு போலீஸ் நிலையத்தில் தனது மகள் மர்மமாக இறந்திருப்பதாகவும், நடவடிக்கை எடுக்குமாறும் புகார் கொடுத்தார். அதன்பேரில் ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தஞ்சாவூர் ஆர்டிஓ விசாரணைக்கும் பரிந்துரை செய்துள்ளனர்.அதன்பேரில் இன்று ஆர்டிஓ விசாரணை நடைபெறுகிறது.

Tags : death ,investigation ,Ottanadu ,RTO ,
× RELATED கிருஷ்ணகிரி அருகே உள்ள SBI வங்கி ATM-ஐ...