×

குடந்தை அருகே துணிகரம் பூட்டிய வீட்டில் ரூ.3 லட்சம் நகை, பொருட்கள் திருட்டு

கும்பகோணம், செப். 29:  கும்பகோணம் அருகே சாக்கோட்டை சீனிவாச நகர் கங்கை தெருவில் வசிப்பவர் சீனிவாசன் (73). இவர் சென்னையில் உள்ள உறவினர் வீட்டின் நிகழ்ச்சிக்காக கடந்த 19ம் தேதி பூட்டிக் கொண்டு குடும்பத்துடன் சென்றார். இதையடுத்து நேற்று முன்தினம் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு திறக்கப்பட்டு உள்ளே மின்சார விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. உள்ளே சென்று பார்த்த போது, பீரோ, அலமாரிகள் உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தன. பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ.30 ஆயிரம் ரொக்கம், தோடு, மூக்குத்தி, மோதிரம், தங்க காசு என மொத்தம் 6 பவுன் நகைகள், வெள்ளி குத்து விளக்கு, காமாட்சி விளகு, டம்ளர், குங்கும சிமிழ், தட்டு, கிண்ணம், பட்டு புடவைகள் என சுமார் ரூ. 3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருட்டு போனது தெரியவந்தது.இதுகுறித்து மேற்கு காவல் நிலைய  போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Theft ,jewelery ,Kundantha ,house ,
× RELATED சென்னை திருவொற்றியூரில் விசாரணைக்கு...