×

கறம்பக்குடி பகுதியில் அனுமதியின்றி மது பானம் பதுக்கி விற்ற 3 பேர் கைது

கறம்பக்குடி, செப். 30: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பகுதியில் வெவ்வேறு இடங்களில் அனுமதியின் மது பானம் விற்பதாக வந்த தகவலை அடுத்து கறம்பக்குடி சப் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்த பன்னீர்செல்வம், கல்லாக்கோட்டை கிராமத்தை சேர்ந்த சித்திரைவேல், மந்தக்கொல்லை கிராமத்தை சேர்ந்த தங்கதுரை ஆகிய 3 பேரும் புதுப்பட்டி கடை வீதி சொக்கன் தெரு, பேருந்து நிறுத்தம், கீழ மஞ்சுவிடுதி கடைத்தெரு ஆகிய பகுதிகளில் விற்பனை செய்து கொண்டிருந்த போது அவர்களிடம் இருந்து 40 பிராந்தி பாட்டில்களை பறிமுதல் செய்து மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags : Karambakkudy ,area ,
× RELATED ராட்சத அலையில் சிக்கியவர் பலி