×

17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 வாலிபர்கள் போக்சோவில் கைது

பாடாலூர், செப். 30: பாடாலூர் அருகே 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 வாலிபர்கள், போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.ஆலத்தூர் தாலுகா பாடாலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு சனிக்கிழமை திருமணம் நடைபெற இருப்பதாக மாவட்ட சமூக நலத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த சிறுமியை மீட்ட சமூக நலத்துறையினர் அந்த சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஆலத்தூர் தாலுகா மங்கூன் கிராமத்தை சேர்ந்த ரவி மகன் ரஞ்சித் (25), கலியபெருமாள் மகன் பாபு (23) ஆகிய இருவரும் அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.இதையடுத்து சமூக நலத்துறை அலுவலர்கள், பாடாலூர் போலீசாரிடம் கொடுத்த புகாரின்பேரில் ரஞ்சித், பாபு ஆகிய இருவர் மீதும் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். அவர்கள் இருவரையும் பெரம்பலூர் குற்றவியல் நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.

Tags : juveniles ,
× RELATED அரசு கூர்நோக்கு சிறப்பு இல்லத்தில்...