×

காந்தி ஜெயந்தியையொட்டி மதுக்கடைகளுக்கு 2ம்தேதி விடுமுறை

நாகை,செப்.30:காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வரும் 2ம் தேதி நாகையில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடுவதாக கலெக்டர் பிரவின் பி நாயர் தெரிவித்துள்ளார்.காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வரும் 2ம் தேதி நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகள், ஓட்டல்களில் செயல்படும் மது கூடங்கள் ஆகியவை செயல்படக்கூடாது. அவ்வாறு மீறி மதுபானம் விற்பனை செய்வோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Tags : liquor shops ,
× RELATED கன்னியாகுமரியில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடல்