×

வேதாரண்யம் தாலுகா பகுதியில் விடுபட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

வேதாரண்யம், செப்.30: வேதாரண்யம் தாலுகாவில் 2018-2019 ஆண்டு பயிர் காப்பீட்டு தொகை தற்போது வேதாரண்யம் பகுதி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதில் வேதாரண்யம் தாலுகா புஷ்பவனம் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம் 2017- 18ம் ஆண்டிற்கு பயிர் காப்பீடு 838 விவசாயிகளுக்கு ரூ.2.33 லட்சம் பிரிமியம் தொகை சுமார் 332 ஹெக்டேர் நிலத்திற்கு பயிர் காப்பீட்டு தொகை கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி செலுத்தப்பட்டது.இதில் 597 விவசாயிகளுக்கு 45 லட்சத்து 43 ஆயிரம் தொகை வந்துள்ளது. மேலும் பிரிமியம் செலுத்திய 241 விவசாயிகளுக்கு ரூ.31.70 லட்சம் வரவேண்டி உள்ளது.

இதனால் இழப்பீட்டு தொகை வராத விவசாயிகள் முழு காப்பீட்டு தொகை வந்த பிறகுதான் அனைத்து இழப்பீட்டு தொகையும் வழங்க வேண்டும் என வங்கி பணியாளர்களிடம் விவசாயிகள் வலியுறுத்திகின்றனர். இதனால் வந்த தொகையும் வழங்க முடியாமல் உள்ளது. எனவே பிரிமியம் கட்டிய அனைத்து விவசாயிகளுக்கும் உடனே நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : taluk area ,Vedaranyam ,
× RELATED வேதாரண்யம் அருகே குடிதண்ணீர் கேட்டு பெண்கள் காலிக்குடங்களுடன் மறியல்