×

பரமன்குறிச்சியில் 108 சுமங்கலி பூஜை

உடன்குடி, செப்.30: பரமன்குறிச்சி மாயாண்டி சுவாமி கோயிலில் புரட்டாசி கொடை விழாவையொட்டி 108 சுமங்கலி பூஜை நடந்தது. பரமன்குறிச்சி மாயாண்டி சுவாமி கோயிலில் புரட்டாசி கொடை விழாவையொட்டி 26ம்தேதி காலை 9மணிக்கு கணபதி ஹோமம், அபிஷேகம், அலங்கார பூஜைகள், தீபாரானையும், இரவு 8மணிக்கு பட்டிமன்றமும் நடந்தது. 27ம்தேதி காலையில் வில்லிசை, பகல் 12மணிக்கு சிறப்பு தீபாராதனையும் நடந்தது. மாலை 5மணிக்கு இந்து அன்னையர் முன்னணி சார்பில் 108சுமங்கலி பூஜை நடந்தது. இதில் இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் ஜெயக்குமார், மாநில செயலர் அரசுராஜா, மாவட்ட செயலர் மாயக்கூத்தன் மற்றும் திரளான நிர்வாகிகள் ஊர்மக்கள் பங்கேற்றனர். இரவு 9மணிக்கு அய்யாவழி பாடகர் சிவச்சந்திரனின் அருளிசை வழிபாடு, 11மணிக்கு கணியான் கூத்து, நையாண்டி மேளம், கரகாட்டம் நடந்தது. 28ம்தேதி அதிகாலையில் உணவுபிரித்தல் நடந்தது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

Tags : Sumangali Pooja ,Paramankurichi ,
× RELATED திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு...