×

தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் அபாய பள்ளம்

ஸ்பிக்நகர், செப்.30: தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் ஸ்பிக்நகரை அடுத்த அபிராமிநகரில் சாலையில் ஏற்பட்டுள்ள அபாய பள்ளத்தை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் 4வது பைப்லைன் திட்டத்தின் கீழ் குழாய்கள் பதிக்கப்பட்டது. இதில் அவ்வப்போது உடைப்பு ஏற்படுவது அதனை சரிசெய்வதுமாக இருந்து வருகிறது. உடைப்பு சரி செய்யப்பட்ட பல பகுதிகளில் தோண்டப்பட்ட பள்ளத்தை நிரப்பினாலும் சாலையை சரியாக போடாததால் முள்ளக்காடு முதல் முத்தையாபுரம் வரையிலான பல பகுதிகளில் சாலையில் ஆங்காங்கே உள்ள பள்ளங்கள் காணப்படுகிறது. இதில் தினமும் விபத்துகள் ஏற்படுகிறது.

இந்நிலையில் ஸ்பிக்
நகரை அடுத்த
அபிராமிநகர் பகுதியில் சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. சாலையில் பள்ளம் இருப்பது தெரியாததால் இருச்சக்கர வாகனம் உள்ளிட்ட வாகனத்தில் வருபவர்கள் பள்ளத்தில் விழுந்து காயமடைகின்றனர். தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையை பொருத்தவரை தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்லக்கூடிய பகுதியாகும். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதில் தனிக்கவனம் செலுத்தி ஆபத்தான பள்ளத்தை உடனடியாக சீரமைத்திட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

Tags : Tuticorin-Thiruchendur ,
× RELATED மின் இணைப்பு பணியால்...