×

டெங்கு தடுப்பு விழிப்புணர்வு முகாம்

சேந்தமங்கலம், செப்.30: புதுச்சத்திரம் ஒன்றியம் பாப்பிநாயக்கன்பட்டி ஊராட்சியில், டெங்கு தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. நிகழ்ச்சிக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன் தலைமை வகித்தார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராஜேந்திரன், சுகாதார ஆய்வாளர்கள் தினேஷ், சரத், ஊராட்சி செயலாளர் முத்துசாமி மற்றும் தூய்மை காவலர்கள் ஆகியோர், கிராமங்களில் வீடு வீடாக சென்று டெங்கு தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது, தண்ணீர் தொட்டிகளில் அபேட் மருந்து தெளித்தனர். மேலும், தெருக்களில் வீசப்பட்டு கிடந்த பழைய டயர் மற்றும் கழிவு பொருட்களை அப்புறப்படுத்தினர். தொடர்ந்து, வட்டார மருத்துவ அலுவலர் அமுதா தலைமையில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

Tags : Dengue Prevention Awareness Camp ,
× RELATED சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்...