×

ராசிபுரத்தில் ஆதி தமிழர் பேரவை மாநாடு

ராசிபுரம், செப்.30:  ராசிபுரத்தில் ஆதி தமிழர் பேரவை சட்டமன்ற தொகுதி மாநாடு நடைபெற்றது. மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் சுமன் வரவேற்றார். பேரவையின் நிறுவன தலைவர் அதியமான், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் காந்திசெல்வன், மேற்கு மாவட்ட செயலாளர் மூர்த்தி எம்எல்ஏ உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர். தமிழகத்தில் நடைபெற இருக்கின்ற இரண்டு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுகின்ற திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பது என முடிவு செய்யப்பட்டது. சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி மன்ற தேர்தல்களில் அருந்ததியினர் சமூகத்திற்கு வாய்ப்புகள் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : Aditi Tamil Conference ,Rasipuram ,
× RELATED பயிற்சி வகுப்பில் தூங்கி வழிந்த அலுவலர்கள்