×

அரூர் அருகே ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றம்

அரூர், செப்.30:அரூர்- திருவண்ணாமலை சாலையில், ஆண்டியூர் என்னும் இடத்தில் சாலையோரத்தில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில், போக்குவரத்திற்கு இடையூறாக கடைகள் அமைக்கப்பட்டிருந்தது. இது குறித்து பொதுமக்களிடம் இருந்து புகார் எழுந்தது. இதன் எதிரொலியாக, கோட்ட பொறியாளர் தனசேகரன் உத்தரவின் பேரில், உதவி கோட்ட பொறியாளர் ஜெய்சங்கர், இளநிலை பொறியாளர் பாஸ்கரன் ஆகியோர், சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். பின்னர் போக்குவரத்திற்கு இடையூறாக வைக்கப்பட்டிருந்த ஆக்கிரமிப்பு கடைகள் பொக்லைன் மூலம் இடித்து அகற்றப்பட்டது. ஆக்கிரமிப்புகள் அகற்றிய பின்னர், போக்குவரத்திற்கு இடையூறாக சாலை அக்கிரமித்தால் சம்மந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Demolition ,occupations ,Aroor ,
× RELATED ஊர்வலம், பொதுக்கூட்டம் நடத்த அனுமதி இல்லை