×

கிடப்பில் போடப்பட்ட சு.குளத்தூர் ஏரி தூர்வாரும் பணி

சங்கராபுரம், செப். 30: சங்கராபுரம் அடுத்துள்ளது சு.குளத்தூர் கிராமம். இந்த கிராமத்தில் அதிக அளவில் விவசாய நிலங்கள் உள்ளது. சாத்தனூர் வலதுபுற கால்வாய் மூலம் ஆண்டுக்கு ஒரு முறை தண்ணீர் இந்த ஏரிக்கு வரும். மேலும் மழை காலங்களில் மழைநீரை சேமித்து வைத்து கிராம விவசாய நிலங்களுக்கு பயன்படுகிறது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான குடிமராமத்து பணிகளுக்கு ரூ.30 லட்சம் அரசு நிதி ஒதுக்கியது. அதன் பணிகள் ஆயக்கட்டு சங்கத்திற்கு வழங்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால் பணிகள் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதி மூத்த விவசாயிகள் கூறுகையில், எங்கள் கிராமத்தில் ஏரி குடிமராமத்து பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஏரியில் மதகு பணிகள் தரமாக நடைபெறவில்லை. கடமைக்கு பணிகள் செய்யப்பட்டுள்ளது. வரத்து வாய்க்கால் சீரமைப்பு பணிகளும் தொடங்கப்படவில்லை. எனவே மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து நடவடிக்கை எடுத்து மந்தமாக நடந்து வரும் குடிமராமத்து பணிகளை விரைந்து துவக்கி முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Chu Cluttur ,lake ,
× RELATED பண்ருட்டியில் அடுத்த எஸ். ஏரி பாளையம். கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு