திருப்புத்தூர், செப். 30: திருப்புத்தூரில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் கிராம உதவியாளர்களுக்கு வாக்காளர் சரிபார்க்கும் பணி குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் சங்கரநாராயணன் தலைமை வகித்தார். அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் கிராம உதவியாளர்களுக்கு மொபைல் ஆப்பில் பிஎல்ஓ எனப்படும் செயலியை பதிவிறக்கம் செய்வது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
திருப்புத்தூர் வட்டாட்சியர் தங்கமணி, துணை வட்டாட்சியர் (தேர்தல்) சுப்பிரமணியன், முதுநிலை வருவாய் ஆய்வாளர் ஜெகதீஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் கிராம உதவியாளர்கள் பயிற்சி பெற்றனர்.