மதுரை, செப். 30: மதுரை நீர்நிலைகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் செல்லூர் கண்மாய் கரையில் பனைமரம் விதைகள் நேற்று நடவு செய்யப்பட்டது. 300க்கும் மேற்பட்ட விதைகள் நடவு செய்யப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கு இயக்க தலைவர் அபுபக்கர் தலைமை வகித்தார். அமெரிக்கன் கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர், செல்லூர் இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி, பேராசிரியர்கள் ராஜேஷ், நாகரத்தினம், தலைமையாசிரியர் செந்தில்குமார், என்எஸ்எஸ் மாணவர்கள் உள்ளிட்டோர் விதைகளை நடவு செய்தனர்.