கோவை, செப்.30: கோவை நன்னெறி கழகத்தின் 63ம் ஆண்டு விழா மற்றும் இறைநெறிச் செம்மல் விருது வழங்கும் விழா நேற்று கிக்கானி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. விழாவில் ஜே.ஆர்.இன்ஜினியர்ஸ் நிறுவன தலைவர் ஜெயபால், ஓம் சக்தி மருத்துவமனை தலைவர் டாக்டர் வேலுமணி ஆகியோருக்கு இறைப்பணியை பாராட்டி இறைநெறிச் செம்மல் விருது வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நன்னெறிக் கழகத்தின் தலைவர் சுப்ரமணியம் வரவேற்றார். பாரதிய வித்யா பவன் தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயர் விருதினை வழங்கி பேசினார். ஐ.ஐ.டி. டெல்லியின் முன்னாள் பேராசிரியர் மற்றும் தமிழ் பாரம்பரிய அறக்கட்டளையின் நிறுவனர் சாமிநாதன் மற்றும் ஸ்ரீ நரசிம்மப்பிரியா, அனந்த பத்மநாபாச்சாரியார் சுவாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். நன்னெறிக்கழக செயலாளர் செல்வராஜ் நன்றி கூறினார்.