×

எஸ்ஏபி பள்ளி சார்பாக காந்தி நூற்றாண்டு நினைவு பேரணி

உத்தமபாளையம், செப்.26: உத்தமபாளையம் எஸ்ஏபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பாக காந்தியடிகளின் நூற்றாண்டு நினைவு தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. உத்தமபாளையம் எஸ்ஏபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகள் போதித்த அகிம்சை கொள்கையை மக்களுக்கு விளக்கிடும் வகையிலும், சுற்றுப்புறச் சூழலை பாதுகாத்திடும் வகையிலும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை பள்ளியின் தாளாளர் ஆறுமுகம் தொடங்கி வைத்தார். செயலாளர் கண்ணன் முன்னிலை வகித்தார். ஊரின் முக்கிய வீதிகள் வழியாக பேரணி சென்றது.இதில் காந்தியடிகள் போதனைகள், மக்களுக்கு இன்றைய சூழலில் தேவைப்படும் சூழல் பாதுகாப்பு, இயற்கை வள மேம்பாடு பற்றி விளக்கினர். இதில் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Tags : commemoration rally ,school ,SAP ,
× RELATED சேம்பார் பள்ளியில் மாணவர் சேர்க்கை பேரணி