×

ரயில்வே காலனியில் தூய்மைப்பணி

மதுரை, செப். 26: மதுரை ரயில்நிலையம், சுற்றுப்புறப் பகுதிகள் மற்றும் ரயில்வே காலனி குடியிருப்பு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நேற்று மதுரைக் கல்லூரி என்.சி.சி. மாணவர்கள், ரயில்வே காலனி பகுதியில் தூய்மைப்பணியில் ஈடுபட்டனர்.
கூடுதல் மருத்துவக்கண்காணிப்பாளர் டாக்டர் பத்மலதா, உதவி சுகாதார அலுவலர் பாலசுப்பிரமணியன் மற்றும் மருத்துவத்துறை பணியாளர்கள் மேற்பார்வையில் இப்பணிகள் நடந்தது. கல்லூரி என்சிசி அதிகாரி கார்த்திகேயன் தலைமையில் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் இப்பணியில் ஈடுபட்டனர்.

Tags : Cleanup ,
× RELATED உலகளாவிய இயற்கை மீட்டெடுப்பு கங்கை...