×

அடிப்படை வசதி கோரி ஆர்ப்பாட்டம்

திருப்பூர், செப் 26:  திருப்பூர் கொங்கு மெயின் ரோடு வஉசி நகர் குடியிருப்பு பகுதியில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி அப்பகுதி பொதுமக்கள் மற்றும் மக்கள் பாதுகாப்பு அமைப்பினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
  திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 18 வது வார்டு பகுதியில் சுமார் 2000 குடியிருப்புகளில் மக்கள் வசித்துவருகின்றனர். இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அங்குள்ள கிணறு ஒன்றில் நீர் எடுத்து பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சமீபகாலமாக கிணறு இருக்கும் பகுதியில் மர்மநபர்கள் இரவு நேரங்களில் வந்து குப்பைகளை கொட்டி செல்கின்றனர். இதனால் இந்த கிணற்றில் தண்ணீர் எடுத்து பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.  மேலும் இந்த பகுதியில் உள்ள அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரியும், கிணற்றை தூர்வாரக்கோரியும் மாநகராட்சியில் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும்  எடுக்காததால் அப்பகுதி பொதுமக்கள் மக்கள் பாதுகாப்பு அமைப்புடன் சேர்ந்து வா.ஊ.சி நகர் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்த ஆர்ப்பட்டத்திற்கு மக்கள் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் கார்மேகம் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் சரவணன் மற்றும் பொதுமக்கள் திரளானோர் கலந்துகொண்டுனர்

Tags : Demonstration ,
× RELATED காங்.கட்சியினர் ஆர்ப்பாட்டம்