×

குலசை தசராவையொட்டி திருச்செந்தூருக்கு மீண்டும் ரயில் இயக்க கோரிக்கை

பொள்ளாச்சி, செப்.26: குலசை தசராவையொட்டி பொள்ளாச்சியிலிருந்து திருச்செந்தூருக்கு மீண்டும் ரயில் சேவை துவங்க வியாபாரிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொள்ளாச்சி வட்டார சிறு வியாபாரிகள் சங்கத்தினர் நேற்று, பாலக்காடு கோட்ட அதிகாரிகளிடம் நேரில் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது, ‘கோவையிலிருந்து பொள்ளாச்சி வழியாக திண்டுக்கல் வரையிலும் உள்ள அகல ரயில்பாதையில் திருச்செந்தூருக்கு செல்லும் ரயிலில் வியாபாரிகள், தொழிலாளர்கள், பொதுமக்கள் என பலரும் பயணிக்கின்றனர்.  இருப்பினும், இரவு நேரத்தில் ரயில் வசதி ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்துள்ளது. இந்த நிலையில், பொள்ளாச்சி வழியாக இயக்கப்படும் ரயில் சேவை  திருச்செந்தூருக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது பயணகளுக்கு வேதனையை ஏற்படுத்துகிறது. திருச்செந்தூர் அருகே குலசையில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்ளும் தசரா திருவிழா அடுத்த வாரத்தில் துவங்க உள்ளது.
 இவ்விழாவிற்கு, ஏராளமானோர் செல்வார்கள் என்பதால், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள, பொள்ளாச்சி வழியாக செல்லும் திருச்செந்தூர் ரயில் சேவையை, உடனடியாக தொடர தென்னக ரயில்வே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags : Kulasai Dasarawa ,Thiruchendur ,
× RELATED பள்ளிகள் விடுமுறையையொட்டி...