×

கொலை வழக்கில் சரணடைந்த வாலிபர் சிறையில் அடைப்பு

சத்தியமங்கலம், செப்.26. பவானிசாகர் அருகே உள்ள நால்ரோடு கணபதிநகரை சேர்ந்த ஜெயராஜ் என்பவரின் 15 வயது பெண் புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் இயங்கி வரும் பனியன் கம்பெனிக்கு வேலைக்கு சென்று வந்தார். இந்நிலையில் அதே பனியன் கம்பெனியில் பணிபுரிந்துவரும் திருப்பூர் மாவட்டம் சேவூர் அருகே உள்ள மங்கரசு வலையபாளையம் கிராமத்தை சேர்ந்த முருகேஷ்(20) என்ற வாலிபர் கடந்த மே மாதம் அப்பெண்ணிடம் ஆசைவார்த்தை கூறி அழைத்து சென்றுள்ளார்.
 இதுகுறித்து தகவலறிந்த ஜெயராஜ் முருகேசை கண்டித்ததோடு மைனர் பெண்ணை கடத்தியதாக புஞ்சைபுளியம்பட்டி போலீசில் புகார் அளித்ததை தொடர்ந்து முருகேஷ் மைனர் பெண்ணை ஜெயராஜ் வீட்டிற்கு அழைத்து சென்று விட்டுள்ளார்.
இந்நிலையில் கடந்த செப்., 1ம் தேதி  புஞ்சைபுளியம்பட்டி எஸ்.ஆர்.டி தியேட்டர் அருகே உள்ள டாஸ்மாக் மதுபானக்கடை முன்பு நின்றிருந்த ஜெயராஜிடம் முருகேஷ் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் இருவருக்கும் வாய்த்தகராறு முற்றி கைகலப்பு ஏற்பட்டதில் முருகேஷ் அருகே கிடந்த இரும்பு கம்பியால் ஜெயராஜை தாக்கியதில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே மயக்கமடைந்ததாக கூறப்படுகிறது.

 இதையடுத்து காயம்பட்ட ஜெயராஜூக்கு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் ஜெயராஜியின் மனைவி ரோஸ்மேரி புஞ்சைபுளியம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகாரின்பேரில் முருகேஷ் மீது அடிதடி வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஜெயராஜ் செப்., 7ம் தேதி காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தகவலறிந்த முருகேஷ் தலைமறைவானார். இதையடுத்து புஞ்சைபுளியம்பட்டி போலீசார் அடிதடி வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து முருகேஷை தேடி வந்த நிலையில் நேற்று மதியம் முருகேஷ் புஞ்சைபுளியம்பட்டி விஏஓ சுரேஷ்பாபுவிடம் சரணடைந்தார். இதையடுத்து விஏஓ சுரேஷ்பாபு முருகேசை புஞ்சைபுளியம்பட்டி போலீசில் ஒப்படைத்தார்.

Tags : jail ,murder ,
× RELATED பாளையங்கோட்டை சிறையில் விசாரணை கைதி உயிரிழப்பு..!!