×

நகரில் டீ விலை உயர்வு

திருப்பூர், செப்.26:  திருப்பூரில் பத்து ரூபாய்க்கு விற்கப்பட்ட டீ, சில கடைகளில் ரூ.12 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.  திருப்பூரில், ரோட்டோர டீக்கடைகளில் டீ விலை 8 ரூபாயாகவும், பேக்கரிகளில் 10 ரூபாயாகவும் இருந்தது. இந்நிலையில், பால் விலை உயர்வை காரணம் காட்டி நேற்று முன்தினம் முதல் சில கடைகளில் டீ விலை 12 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில், அதிர்ச்சியையும், அதிருப்பதியையும் ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து பேக்கரி உரிமையாளர் ஒருவர் கூறுகையில், பால் விலை 1 லிட்டருக்கு ரூ.6 வரை அதிகரித்துள்ளது. இந்த விலையேற்றத்தை சமாளிக்க நாங்களும் விலை ஏற்றம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. பேக்கரிகளில் தற்போது உள்ள விலையை விட கூடுதலாக ரூ.2 உயர்த்தி உள்ளோம் என்றார்.

Tags : city ,
× RELATED சென்னை கண்ணகி நகரில் போலீசார் மீது கஞ்சா போதை ஆசாமிகள் தாக்குதல்