×

சிவகாசி அருகே குடிநீர் வேண்டி பஸ் மறியலில் ஈடுபட கிராம மக்கள் முயற்சி

சிவகாசி. செப். 26: சிவகாசி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் பஸ் மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. சிவகாசி அருகே சுக்கிரவார்பட்டியில் 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இவர்களுக்கு, கண்மாயில் ‘போர்வெல்’ அமைக்கப்பட்டு மேல்நிலை குடிநீர் தொட்டி மூலமாக குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 15 நாட்களாக குடிநீர் வராமல் பொதுமக்கள் சிரமப்பட்டனர். இது குறித்து புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஊராட்சி அலுவலகம் அருகே சுக்ரார்பட்டி- சிவகாசி சாலையில் திடீரென பஸ் மறியலில் ஈடுபட முயன்றனர்.

சம்பவத்தை கேள்விப்பட்ட திருத்தங்கல் போலீசார் பேச்சுவர்த்தை நடத்தினர். ஊராட்சி சார்பில் தனியார் வாகனத்தில் குடிநீர் கொண்டு வந்து சப்ளை செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து ெபாதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.பொதுமக்கள் கூறுகையில், ‘கடந்த 15 நாட்களாக குடிநீர் சப்ளை இல்லை. புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. விலை கொடுத்து தண்ணீரை வாங்க வேண்டியிருந்தது. தற்காலிகமாக வாகனத்தில் கொண்டு வந்து தண்ணீர் சப்ளை செய்யப்பட்டது.  தொடர்ச்சியாக தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Tags : bus strike ,Sivakasi ,
× RELATED சிவகாசியில் பட்டாசு மூலப்பொருள் உற்பத்தி குடோனில் பயங்கர வெடி விபத்து