×

மாநில கருத்தரங்கிற்கு அருப்புக்கோட்டை பள்ளி மாணவர் தேர்வு

அருப்புக்கோட்டை, செப்.25 தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறையும், பெங்களூரு விஸ்வேஸ்வரய்யா தொழில் மற்றும் தொழில்நுட்ப அறுங்காட்சியும் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் மாநில அளவிலான தேசிய அறிவியல் கருத்தரங்கை நடத்தி வருகிறது. அதன் அடிப்படையில் இந்த கல்வி ஆண்டிற்கான மாநில அளவிலான தேசிய அறிவியல் கருத்தரங்கம் மனிதகுல வளர்ச்சிக்கு வேதியியல் கனிமங்களின் பங்கு என்ற தலைப்பில் பள்ளி அளவிலும், கல்வி மாவட்ட அளவிலும், வருவாய் மாவட்ட அளவிலும் நடத்தப்பட்டது. இதில் விருதுநகர் மாவட்ட அளவில் நடந்த கருத்தரங்கில் அருப்புக்கோட்டை இக்ரா பள்ளியில் படிக்கும் 10ம் வகுப்பு மாணவர் தானிஷ்அகமது கலந்து கொண்டு மாவட்ட அளவில் முதலிடம் பெற்றார். இவர் வருகிற 4ம் தேதி சென்னையில் நடைபெற உள்ள மாநில அளவிலான கருத்தரங்கில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Tags : Aruppukottai School Student Examination for State Seminar ,
× RELATED காவலர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம்...