×

இளம்பிள்ளை அருகே நீரோடையை தனிநபர் ஆக்கிரமிப்பு

இளம்பிள்ளை, செப். 26: இடங்கணசாலை பேரூரா–்டசி ஏழுமாத்தனூரில் நீரோடையை தனிநபர் ஆக்கிரமித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இளம்பிள்ளை அருகே இடங்கணசாலை பேரூராட்சிக்குட்பட்ட ஏழுமாத்தனூர், ஜெயம் நகர் பகுதியில் தனிநபர் ஒருவர், ரியல் எஸ்டேட் தொழிலுக்காக கஞ்சமலை அடிவாரத்தில் இருந்து வரும் நீரோடையை வழிமறித்து ஆக்கிரமித்துள்ளார். இதனால் அங்குள்ள குளம், குட்டைகளுக்கு மழைநீர் செல்வது தடைப்பட்டுள்ளது. நீர்வழித்தட ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பேரூராட்சி நிர்வாகம், வருவாய்த்துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : stream ,Ilampillai ,
× RELATED விமானத்தில் பயணம் செய்த மாநகராட்சி பள்ளி மாணவர்கள்