×

ஒருவந்தூர் புதூர் அரசு பள்ளி மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா

நாமக்கல், செப். 26: நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே ஒருவந்தூர் புதூர் அரசு பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை படித்து முதல் 3 மதிப்பெண் பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.நிகழ்ச்சியில் முத்துகாப்பட்டியைச் சேர்ந்த உலக கொங்கு ஒருங்கிணைப்பாளர் அமெரிக்கா செல்வம் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டினார். மேலும், தனது சொந்த செலவில் பள்ளிக்கு மின் மோட்டாரை வழங்கினார். இதையொட்டி நடைபெற்ற விழாவில் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை மாணவ, மாணவியர் நட்டனர்.நிகழ்ச்சியில் ஆசிரிய, ஆசிரியைகள், தரிசு நில விவசாய சங்க தலைவர் ரவிச்சந்தின் கொங்கு சாந்தி, பெரியசாமி மற்றும் பெற்றோர்கள், மாணவ-மாணவியர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED மது விற்ற 8 பேர் கைது