×

‘ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன் காரைக்குடியில் எட்டு போட வைக்கும் என்ஜிஓ காலனி சாலை

காரைக்குடி, செப்.26: காரைக்குடி கழனிவாசல் என்ஜிஓ காலனியில் சாலைகள் போடப்பட்டு 15 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டதால் தார் சாலையே இல்லாமல் மிகவும் மோசமாக உள்ளது. என்ஜிஓ காலனி மற்றும் புதிய வீட்டு வசதி வாரியம், முன்னாள் படைவீரர் குடியிருப்பு, பவர் கிரிட் மற்றும் திருச்சி-ராமேஸ்வரம் புறவழிச்சாலையை இணைக்கும் சாலை இந்த என்ஜிஓ காலனி சாலை தான்  காலையில் இருந்து மாலை வரை பள்ளி பேருந்துகளும், இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களும் சென்று வரும் சாலையாக உள்ளது. கழனிவாசல் என்ஜிஓ காலனி மயானத்திற்கும் இச்சாலையை கடந்து தான் செல்ல வேண்டும். இச்சாலை போடப்பட்டு 15 ஆண்டுகளுக்கு மேல் ஆவதாக அப்பகுதி ஏரியா வாசிகள் கூறினர். நேற்று முன்தினம் பெய்த கன மழையில் சாலை எது?, சாலையில் உள்ள பள்ளம் எது என தெரியாத அளவிற்கு மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

இதனால் வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்தோடு இச்சாலையை கடக்க வேண்டி உள்ளது. இரவு நேரங்களில் இன்னும் அதிக அச்சத்தோடு செல்ல வேண்டி இருப்பதாக ஏரியா வாசிகள் தெரிவித்தனர். நகர் மன்ற உறுப்பினர்கள் இருக்கும் வரை வார்டு குறைகளை நகர்மன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்து சரி செய்து கொண்ட நிலையில் தற்போது குறைகளை யாரிடம் தெரிவிப்பது, என தெரியாமல் உள்ளதாக ஏரியா வாசிகள் தெரிவித்தனர்.
ஆகவே சங்கராபுரம் ஊராட்சி நிர்வாகம் உடன் நடவடிக்கை எடுத்து சாலையை அமைத்து தர கோரிக்கை விடுத்தனர்.

Tags : NGO Colony Road ,Jodhitha Ratna ,KP Vidyadharan ,Karaikudi ,
× RELATED ‘ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன் பட்டா...