×

தகவல் பகுப்பாளர் பணிக்கு விண்ணப்பம்

சிவகங்கை, செப். 26: இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சமூக பாதுகாப்புத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் செயல்படும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் தகவல் பகுப்பாளர் பணியிடம் ஓர் ஆண்டிற்கு ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இப்பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாத தொகுப்பூதியம் ரூ.14ஆயிரம் வழங்கப்படும். பி.ஏ, பி.சி.ஏ, பி.எஸ்.சி(கணிதம், புள்ளியியல்) கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும். 40வயதிற்குட்பட்டவராக இருக்கவேண்டும். ஏதேனும் ஒரு நிறுவனத்தில் 2ஆண்டுகள் கணினி சார்ந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தொகுதி ‘ஆ’ அல்லது அதற்கு மேற்பட்ட நிலையில் பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் 62வயதிற்குட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். < https://sivaganga.nic.in >என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பம் மற்றும் உரிய சான்றிதழ் நகல்களை இணைத்து 07.10.2019க்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, பெரியார் நகர் முதல் தெரு, சிவகங்கை 630561.என்ற முகவரியில் கிடைக்கும் வகையில் அனுப்ப வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED நாய் குட்டிகளுக்கு 3 மாதத்தில் தடுப்பூசி போட அறிவுறுத்தல்