×

நிலத்தகராறில் மோதல் 5 பேர் படுகாயம்

கிருஷ்ணகிரி, செப்.26: குருபரபள்ளி அருகே உள்ள நெடுசாலைப் பகுதியைச் சேர்ந்தவர் தனபால்(33). இவர் அதேபகுதியில் மெடிக்கல் கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கும், இவரது உறவினர்கள் அன்பரசன், சரோஜா, நாகராஜ், முருகேசன், மாது, ராஜா ஆகியோருக்கும் இடையே நிலம் பிரிப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் அன்பரசன் உள்ளிட்டோர், தனபாலின் மெடிக்கல் கடைக்கு சென்று அவரிடம் தகராறு செய்துள்ளனர். இதில் இருத்தரப்பினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இந்த தாக்குதலில் 5 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்தவர்கள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த குருபரபள்ளி போலீசார் தகராறில் ஈடுபட்டவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : clash ,
× RELATED கூட்டணி ஒருங்கிணைப்பு கூட்டத்தில்...