×

மாணவ, மாணவியர் நலன் கருதி சமையலர், துப்புரவாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் எஸ்சி., எஸ்டி நல பள்ளி விடுதி பணியாளர் சங்கம் வலியுறுத்தல்

திருச்சி, செப்.26: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பள்ளி விடுதி பணியாளர் சங்கத்தில் மாவட்ட செயற்குழுக் கூட்டம் திருச்சியில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் நடேசன் தலைமை வகித்தார். நாகராஜ், மனோகரன், பொன்னம்பலம், சரவணன், செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மதியழகன் வரவேற்றார். மாநில தலைவர் காமராஜ் சிறப்புறையாற்றினார். கூட்டத்தில், ‘திருச்சி மாவட்டத்தில் கடந்த 19 ஆண்டாக சமையலர், துப்புரவுப் பணியாளர்கள் காலிப்பணியிடங்கள நிரப்பாமல் உள்ளது. மாணவ, மாணவியர் நலன் கருதி காலியிடங்களை நிரப்ப வேண்டும்.

சமையலர்களுக்கு 19 ஆண்டாக காவலர் பதவி உயர்வு வழங்காமல் உள்ளது. பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும். சமையலர் பணியில் 9/2015ல் சேர்ந்த பணியாளர்களுக்கு பணிவரன் முறை மற்றும் தகுதிகாண் பருவம் வழங்கவில்லை. பணிமூப்பு அடிப்படையில் ஓட்டுனர் பயிற்சி பெற்ற சமையலர்களுக்கு ஓட்டுநர் பணி வழங்க வேண்டும். ஆதிதிராவிடர் நல அலுவலருக்கு சுற்றறிக்கை மற்றும் அரசாணை வெளியிட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்காமல் உள்ளது. உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டம் முடிந்த பின், இத்தீர்மானங்களை நிறைவேற்றக்கோரி திருச்சி கலெக்டர் சிவராசுவை சந்தித்து மனு அளித்தனர்.

Tags : cook ,cleaner ,
× RELATED சூலூர் அருகே சமையல் தொழிலாளி அடித்துக்கொலை