×

பூதலூர் பகுதி மக்கள் அவதி மல்லபுரத்தில் 27ம் தேதி மக்கள் குறைதீர் முகாம்

கும்பகோணம், செப்.26: கும்பகோணம் தாலுகா மல்லபுரம் கிராமத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் வரும் 27ம் தேதி நடக்கிறது. இதுகுறித்து தாசில்தார் பாலசுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கும்பகோணம் தாலுகா மல்லபுரம் கிராமத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் வரும் 27ம் தேதி நடக்கிறது. இந்த முகாமில் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர். எனவே ஒரே நாளில் முடிவு செய்யக்கூடிய ஜாதி சான்று, வருமானம், இருப்பிடம், பிறப்பு இறப்பு, முதல் பட்டதாரி போன்ற சான்றுகளுக்கான உரிய படிவத்தில் ஆதார ஆவணங்களை இணைத்து தொடர்புடைய அலுவலர்களிடம் மனு கொடுத்து பொதுமக்கள் பயனடையலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : area ,Awadhi Camp ,Poothalur ,
× RELATED அருமனை அருகே மின்கசிவு ஏற்பட்டு வீடு தீப்பிடித்து எரிந்தது