×

வீட்டின் கதவை உடைத்து கொள்ளை முயற்சி

திண்டிவனம், செப். 26: திண்டிவனம் காமராஜர் நகரில் வசிப்பவர் பானுகுமார் (60), ஓய்வுபெற்ற போக்குவரத்து துறை அலுவலர். இவர் தன் குடும்பத்துடன் ஜார்கண்ட் பகுதியில் உள்ள கோயிலுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டின் பின்பக்க கதவை உடைத்து வீட்டின் உள்ளே சென்ற மர்ம நபர்கள் பீரோவை உடைத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் திண்டிவனம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பானுகுமார் தன் உறவினரிடம் நகைகளை கொடுத்துள்ளார். இதனால்வீட்டில் எந்த பொருட்களும்,நகைகளும் திருடுபோகவில்லை என்பது தெரிந்தது.இருப்பினும் பானுகுமார் குடும்பத்தினர் வீட்டுக்கு வந்தபிறகுதான் கொள்ளை நடந்துள்ளதா? இல்லையா? என்பது தெரிய வரும். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : house ,
× RELATED சேப்பாக்கம் புதிய அரசு விருந்தினர்...