×

வேலைகேட்டு மனு கொடுக்கும் ஆர்ப்பாட்டம்

மரக்காணம், செப். 26:  அகில இந்திய விவசாய சங்கம் சார்பில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஒன்றியத்தில் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் 100 நாள் வேலையை 200 நாட்களாக மாற்றவேண்டும். இந்த திட்டம் மூலம் நாள் ஒன்றுக்கு ரூ.300 கூலி வழங்க வேண்டும். மரக்காணம் ஒன்றியம் கந்தாடு பழைய தெரு பகுதியில் இருக்கும் ஏரியின் மதகை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுத்தி மரக்காணம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன் வேலைகேட்டு மனு கொடுக்கும் ஆர்ப்பாட்டம் நடந்தது. கிளை செயலாளர் ராஜீ தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் அர்ச்சுனன். மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி, வட்ட செயலாளர்கள் ராமதாஸ், மகேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர்.

Tags : Job seeker demonstration ,
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை