×

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு கடை

கடலூர், செப். 26: தீபாவளிபண்டிகையை முன்னிட்டு பட்டாசு கடை வைப்பது சம்பந்தமாக கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது: தீபாவளி திருநாளன்று பட்டாசுகள் விற்பனை செய்திட பண்டிகைக்கு 30 நாட்களுக்கு முன் தற்காலிக உரிமம் வழங்கிட விண்ணப்பங்களை இணைய தளம் வழியாக சமர்ப்பிக்க அரசாணை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை,  வெளியிடப்பட்டு, வரும் தீபாவளிக்கு பட்டாசு விற்பனை செய்திட விண்ணப்பங்கள் இணையவழி மூலமாக கடந்த 31ம் தேதி வரை பெறப்பட்டது.வணிகர்கள், விற்பனையாளர்களின் கோரிக்கையை ஏற்று இணையவழியாக விண்ணப்பம்  செய்ய  வருகிற 28ம் தேதி வரை கால நீடிப்பு செய்யப்பட்டுள்ளது.  இக்கால நீடிப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு வணிகர்கள், விற்பனையாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

விண்ணப்பிக்கும்போது, கடையின் வரைபடம் , உரிமம் கோரும் இடத்தின் உரிமையாளராக இருப்பின் அதற்கான பத்திர நகல் (அசல்  மற்றும் 5 நகல்), உரிமம்  கோரும் இடம்  வாடகை கட்டிடம் எனில், இடத்தின் கட்டிட உரிமையாளரிடம்  ரூ.20-க்கான முத்திரைதாளில் பெறப்பட்ட அசல் வாடகை ஒப்பந்த பத்திரம், ரூ.500-க்கான கருவூல அசல் சலான்,  வீட்டு முகவரிக்கான ஆதாரம், நடப்பு நிதியாண்டின் வீட்டு வரி செலுத்திய ரசீது, மனுதாரரின் பாஸ்போர்ட் அளவுள்ள விண்ணப்ப புகைப்படம்  ஆகியவற்றை  விண்ணப்பத்துடன் இணைத்து  விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை அரசு உத்தரவின்படி வரும் 28ம் தேதி மாலை 5.45 மணிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 28ம் தேதிக்கு பின்னர் விண்ணப்பிக்கும், விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்று கூறியுள்ளார்.

Tags : occasion ,Diwali ,
× RELATED ஏலச்சீட்டு, தீபாவளி பண்டு நடத்தி ரூ.57 லட்சம் மோசடி செய்த பெண் கைது