×

திருமானூர் அருகே நீர்நிலையில் ஆக்கிரமிப்பு அகற்றி தூர்வாரக் கோரி ஆர்ப்பாட்டம்

அரியலூர், செப்.26: திருமானூர் அருகே நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி ஏரி, குளங்களை தூர்வாரக்கோரி கிராம மக்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே குருவாடி கிராமத்தில் 6 ஏரிகள், 2 குளங்கள் உள்ளன. இந்த நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரக்கோரி கிராம மகள் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர். இதனையடுத்து, தற்போது ஒரு ஏரியில் மட்டும் ஆக்கிரமிப்பினை அகற்றி தூர்வாரப்பட்டுள்ளதாக தெரிகிறது. மற்ற ஏரிகளின் ஆக்கிரமிப்புகள் அகற்றி தூர்வாரப்படும் என அதிகாரிகள் தெரிவித்தும் இதுவரை மற்ற எந்த ஏரிகளிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. தூர்வாரவும் இல்லை. எனவே ஏரிகளை தூர்வார நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்தும், உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரக்கோரியும் திருமானூர் அருகே குருவாடியில் கிராம மக்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags : Demonstration ,removal ,Thirumanur ,
× RELATED திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் குளித்த இளைஞர் நீரில் மூழ்கி பலி