×

அரசு இடத்தில் பட்டா வழங்கக்கோரி விஏஓவுக்கு கொலை மிரட்டல் விடுத்த ஆயுதப்படை போலீஸ்காரர் கைது

ஆரணி, செப்.26: ஆரணி அருகே அரசு இடத்தில் பட்டா வழங்கக்கோரி விஏஓவுக்கு கொலை மிரட்டல் விடுத்த ஓய்வு பெற்ற ஆயுதப்படை போலீஸ்காரரை போலீசார் கைது செய்தனர்.திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த கொழாவூர் கிராமத்தை சேர்ந்தவர் புருஷோத்தமன்(39), இவர் ஆரணி அடுத்த முள்ளண்டிரம் ஊராட்சி மற்றும் வெட்டியாந்தொழுவம் கிராமத்திற்கு விஏஓ (பொறுப்பு) பணியாற்றி வருகிறார்.வெட்டியாந்தொழுவம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி மூர்த்தி(40). இவர், அதே பகுதியில் உள்ள அரசு இடத்தை ஆக்கிரமிப்பு செய்து அந்த இடத்திற்கு பட்டா வழங்குமாறு விஏஓ புருசோத்தமனிடம் கடந்த சில நாட்களாக கேட்டு வந்துள்ளார்.அது பிடிஓ அலுவலகத்திற்கு சொந்தமான இடம் என்பதால் பட்டா வழங்க முடியாது என்று புருஷோத்தமன் தெரிவித்தாராம். இதனால் ஆத்திரமடைந்த மூர்த்தி தனது நண்பரான அதே கிராமத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆயுதப்படை போலீஸ்காரரான முனுசாமியிடம்(50) தெரிவித்தார். இந்நிலையில் நேற்று வழக்கம் போல் முள்ளண்டிரத்தில் உள்ள விஏஓ அலுவலகத்திற்கு புருஷோத்தமன் பணிக்கு சென்றார்.

அப்போது அங்கு வந்த மூர்த்தி, முனுசாமி ஆகியோர், விஏஓ புருஷோத்தமனிடம் பட்டா வழங்கக்கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, முனுசாமி விஏஓ புருஷோத்தமனை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்தாராம்.இதுகுறித்து விஏஓ புருசோத்தமன் ஆரணி தாலுகா போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் தாலுகா இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் மற்றும் போலீசார் முனுசாமியை கைது செய்து ஆரணி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைதான முனுசாமி மீது ஆரணி தாலுகா காவல் நிலையத்தில் வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags : policeman ,
× RELATED டெல்லி விவசாயிகள் போராட்டத்தின் போது...