×

விவசாயி, டாக்டரை மிரட்டிய தந்தை, மகனுக்கு வலை

களக்காடு, செப். 26: களக்காடு அருகே உள்ள வடுகச்சிமதிலை சேர்ந்தவர் தாமோதரன் மகன் திரு மலைநம்பி (28). விவசாயியான இவர், சம்பவத்தன்று அங்குள்ள சர்ச் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அதே ஊரைச் சேர்ந்த பாண்டி, அவரது மகன் கனகராஜ் ஆகியோர் ரோடு எப்படி போட்டால் உனக்கு என்ன என கேட்டு தகராறு செய்தனர். மேலும் கத்தியை காட்டி கொலை மிரட்டலும் விடுத்தனர். இதேபோல் அதே ஊரைச் சேர்ந்த டாக்டர் கார்த்திக்குமார் (34) என்பவருக்கும் அவர்கள் கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து இருவரும் திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்தனர். பாண்டி, அவரது மகன் கனகராஜ் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : doctor ,
× RELATED பூசணி விதையின் பயன்கள்!