×

கலெக்டர் தகவல் பொன்னமராவதியில் கல்வி பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரம்

பொன்னமராவதி, செப்.26: பொன்னமராவதி பேருந்து நிலையம் முன் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் மாநிலம் தழுவிய, கல்விப் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பிரசார இயக்கம் நடந்தது. வட்டாரச் செயலாளர் மணிக்குமார் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் மயில், மாநில துணைச் செயலாளர் ஹேமலதா, மாநில துணைத் தலைவர் தமிழ்செல்வி, மாவட்ட தலைவர் வின்சென்ட், ஜீவன்ராஜ், மாவட்ட பொருளாளர் சக்திவேல், கரூர் மாவட்ட செயலாளர் ஜெயராஜ், கரூர் மாவட்ட பொருளாளர் மோகன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் முத்துச்சாமி, பேச்சியம்மாள் ஆகியோர் கோரிக்கைகளையும், கல்வி பாதுகாப்பு குறித்தும் பேசினர். முடிவில் வட்டார பொருளாளர் ஆனந்த் நன்றி கூறினார்.



Tags : Educational Security Awareness Campaign ,
× RELATED அறந்தாங்கியில் தீ தொண்டு நாள் வாரவிழா