×

கடல்சார் தன்னார்வலர்கள் நியமனம்

உடன்குடி, செப்.26: குலசேகரன்பட்டினம், திருச்செந்தூர் கடலோர காவல்நிலையங்களில் கடல்சார்  தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். குலசேகரன்பட்டினம்,  திருச்செந்தூர் கடலோர காவல் நிலையங்கள் சார்பில் கடலோர பாதுகாப்பு குழம  கூடுதல்  இயக்குநர் வன்னியபெருமாள் உத்தரவின் பேரில் கடலோர காவல் துறை  மற்றும்  பொதுமக்கள் உறவை மேம்படுத்த கடலோர காவல் நிலையத்தில் கடல்சார்  தன்னார்வலர்களை நியமித்து அவர்களுக்கு அடையாள அட்டை மற்றும் சீருடைகள்  வழங்கும் விழா நடந்தது.  தலைமை வகித்த கடலோர காவல் டிஎஸ்பி ராஜ், கடல் சார் தன்னார்வலர்களுக்கு அடையாள அட்டை மற்றும் சீருடை வழங்கினார். இதில் கடலோரக் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சைரஸ், எஸ்ஐ வசந்தகுமார் பங்கேற்றனர். தன்னார்வலர்கள் கடலோர காவல்  குமும்பத்துடன் சேர்ந்து மீட்பு பணி, ரோந்து பணி, வெள்ள மீட்புபணிகளில்  ஈடுபடுவார்கள். குலசேகரப்பட்டினம் மற்றும் திருச்ெசந்தூர் ஆகிய கடலோர  காவல் நிலைய குழுமம் சார்பில் 20 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.


Tags : Marine Volunteers ,
× RELATED உளவியல் ஆலோசனை கூட்டம்