×

குளியலறையில் விழுந்த பெண் சாவு

தூத்துக்குடி,செப்.26: தூத்துக்குடி தாளமுத்துநகர் எம்ஜிஆர் நகரை சேர்ந்த முருகன் மனைவி ஜெசிந்தா(46). கட்டிட தொழிலாளியான இவர் கடந்த 13ம்தேதி இரவு தனது வீட்டின் குளியலறையில் தவறி விழுந்தார்.  இதனால் தலையில் பலத்த அடிபட்ட அவர் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார்.   இதுகுறித்து தாளமுத்துநகர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Tags : bathroom ,
× RELATED ரூ.15 லட்சத்துக்கு தங்கம் இருக்கு: ரூ.10...