×

தூத்துக்குடியில் நாளை முன்னாள் படைவீரர்கள் சிறப்பு குறைதீர் கூட்டம்

தூத்துக்குடி.செப்.26: தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோருக்கான சிறப்பு குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் நாளை (27ம்தேதி) காலை 11 மணிக்கு தூத்துக்குடி கலெக்டர் அலுவலக வளாக சங்குகூடத்தில் நடக்கிறது. தங்கள் மனுவின் 2 பிரதிகளுடன் அசல், நகல், படைவீரர் சான்று மற்றும் அடையாள அட்டையுடன் வரவேண்டும். தற்போது கணினி மூலம் மனுவின் மீது நடவடிக்கை மேற்கொள்வதால் முன்னாள் படைவீரர் எண், தகுதி, பெயர், தகப்பனார் பெயர், முகவரி, தொலைபேசி எண் ஆகியவைகள் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்த படைவீரர்கள் மற்றும் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் சார்ந்தோர்கள் பங்கேற்று பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு உதவி இயக்குநர், முன்னாள் படைவீரர் நலன், தூத்துக்குடி, என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Veterans Special Tribunal ,Tuticorin ,
× RELATED தூத்துக்குடி துப்பாக்கி சூடு...